இந்த ஆண்டில் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி முர்மு உரையாற்றலுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தியுள்ளார். இதற்காக பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.