விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சி இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உத்திரபிரதேசத்தில் 11 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.














