பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் திருப்பூர் தொகுதியில் தற்போது எம்.பி ஆக உள்ள சுப்பராயனை மீண்டும் நிறுத்துவது எனவும், நாகப்பட்டினம் தொகுதியில் மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ் என்பவரை நிறுத்துவதாகவும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர்கள் இருவரையும் மாலை 4 மணி அளவில் கட்சியின் மாநில செயலாளர் ர. முத்தரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.