தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறுகிறது. எண்ணப்பட்ட அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன்படி முதற்கட்டமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி நாளை காலை 7 மணி முதல் 6 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 வகை ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.