சந்திராயன் -3 விண்கலத்தில் ராக்கெட் பாகம் கடலில் விழுந்து உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திராயன் -3 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யன் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பல வகையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது. இந்நிலையில் சந்திராயன்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழும் புள்ளி கணிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.