ட்விட்டர் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், நிறுவனத்தின் சமூகத்தளம் இயங்குவதற்கான அடிப்படை புரோகிராமிங் கோடுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், ஜிட்ஹப் என்ற மென்பொருள் இணைய சேவை நிறுவனத்தை, கோடிங்கை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒப்புதல் மற்றும் அனுமதியின்றி ஜிட்ஹப் கோடிங்கை வெளியிட்டு இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காரணமாக ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், தரவுகளை கசிய விட்ட பயனர்களின் தகவல்களை அறிய ட்விட்டர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. கோடிங் கசிந்ததால் ஹேக்கிங் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜிட்ஹப் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.