ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ல் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகும். இதனை தொடர்ந்து உமர் அப்துல்லா புதன்கிழமை முதலமைச்சராக பதவியேற்றார். அதன் பின்னர் நேற்று நடைபெற்ற சட்டசபையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.