மக்களவையில் மானியக்கோரிக்கை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளிடையே நீடித்து வரும் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர நேற்று மீண்டும் ஒரு சமாதான முயற்சி நடந்தது. துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர் தன் அலுவலகத்தில் இரு தரப்பு கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் பியுஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, அர்ஜுன்ராம் மெஹ்வால், முரளிதரன் மற்றும் மூத்த எம்.பி.,க்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
பின் வழக்கம் போல இரு சபைகளிலும் அமளி வெடித்து சபைகள் ஒத்திவைக்கப்பட்டது. மாலை மக்களைவை கூடியது சபாநாயகர் ஓம் பிர்லா துணைநிலை மானிய கோரிக்கை குறித்த அலுவல்களை எடுத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில், ஒவ்வொன்றாக தாக்கல் செய்யப்பட்டவுடன் இறுதியாக 2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மசோதா நிறைவேற்றப்பட்டது.