சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுள்ளார்.
ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.