பாம்பாட்டி சித்தர் கோவை, அருகில் உள்ள மருதமலையில் தான் பல காலம் வசித்து வந்ததாகவும் கூறுவார்கள். இவர் பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஜோகி இனத்தில் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தாரூடம் என்னும் நூலையும் இவர் எழுதி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
மொத்தம் 123 வருடம் 14 நாட்கள் இவ்வுலகில் வாழ்ந்த பாம்பாட்டி சித்தருக்கு இந்த பெயர் வர காரணம் என்னவென்றால் முற்காலத்தில் திறமையான பாம்பாட்டி ஒருவர் பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அதை பிடிப்பதற்காக காட்டுக்குள் சென்றார்.
அவர் போனது இரவு நேரம் அந்த இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறி போய்க்கொண்டிருந்த அந்த பாம்பாட்டியின் எதிரே திடீரென்று பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது. அதன் அழகில், அதன் ஒளியில் மயங்கிய அந்த பாம்பாட்டி அதை பிடிக்காமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். அப்படியே ஆடாமல்அசையாமல் நின்ற அந்த பாம்பாட்டி முன்பே அந்தப் பாம்பு தவயோகி உருவத்தில் உருவமெடுத்து நின்றது. அந்த யோகி தான் சட்டைமுனி சித்தர். இந்த சட்டைமுனி சித்தர் பாம்பாட்டிக்கு ஞானம் கொடுத்து உலக வாழ்வின் நிலையாமையை எடுத்துச். சொல்லி அவருக்குத் தீட்சையும் கொடுத்து மறைந்துவிட்டார்.
நடந்தது கனவா! நினைவா! என்று திகைத்து நின்ற பாம்பாட்டி மெய்ஞானம் பெற்று மீண்டும் தன் நாட்டினுள் சென்றார். அதே நேரத்தில் அந்நாட்டு அரசன் மரணமடைந்து விடவே அனைவரும் பெருந்துக்கத்தில் இருந்தனர். அவர்களின் துக்கம் தீர்க்கவும், தான் பெற்ற தவ சக்தியைப் பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த அரசனின் உடலில் புகுந்து ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். இதனால் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். பிழைத்து எழுந்த மன்னர் அருகில் இருந்த செத்த பாம்பொன்றைக் பார்த்து. பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார்.
என்ன ஆச்சிரியம் செத்த பாம்பு நெளிந்தது. அனைவரும் வியப்படைந்தனர். பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது. மன்னர் அந்தப் பாம்பைப் பார்த்தார். பாம்பே எங்கே போகிறாய். இறந்துபோன நீ இப்பொழுது எழுந்து விட்டாய். இன்னுமா உலக ஆசை உனக்கு விடவில்லை? உலக வாழ்வில் ஏமாந்து போகாதே என்று சொன்னவர். ‘ஆடு பாம்பே’ என்று ஆணையிட்டார். மன்னரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட பாம்பு மகுடி ஊதாமலேயே ஆடத் தொடங்கியது.
பின் பாம்பை வைத்து பல அற்புதமான தத்துவப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் அவர். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர் உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப் பாடல்களை பாடினார். ஆனால் அவர் பாடியதன் பொருள் சுற்றியிருந்த மக்கள் யாருக்குமே புரியவில்லை. பிழைத்து விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போல என்று கூறிக் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
மன்னரின் செயல்கள் மகாராணிக்கு வியப்பாகிருந்தது. முரட்டுப் பிடிவாதமும், பெண்கள் சுகமும் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர் எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள் ராணி. அவள் ஒவ்வொரு எண்ணத்திற்கும் மன ஓட்டம் அறிந்து ராணி பேசாத வார்த்தைகளுக்கு எல்லாம் தத்துவ பாடல் மூலமே பதில் சொன்னார் மன்னர் உடம்பில் இருந்த பாம்பாட்டி சித்தர். மேலும் அதிர்ச்சியான ராணி அவரை பார்த்து ஐயா, நீங்கள் யார்? எங்கள் மன்னரா? அல்லது யாராவது மகானின் ஆத்மாவான நீங்கள் இந்த உடலில் புகுந்துள்ளீரா? என்று கேட்டாள்.
சித்தரும் ராணியிடம் நடந்த உண்மைகளைக் கூறினார். சில காலம் இந்த உடலில் வசிக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி அவளுடன் கொஞ்சநாள் மூன்றாவது மனிதர் போலவே வாழ்ந்தார். அதற்குள் பாம்பாட்டி சித்தரை தேடி வந்த அவரது சீடர்கள். பாம்பாட்டி சித்ர் மீண்டும் பழைய உடலுக்குத் திரும்ப சில பாடல்களை பாடி அவர்கள் குருவை மீட்டுச் சென்றதாகக் கூறுகிறார்கள்.
இவர் பாடலில் எல்லாப் பாடல்களுமே ஆடு பாம்பே என்று முடிவதற்கு செத்த பாம்பை ஆட்டுவித்து இவர் தத்துவங்களைச் சொன்னதற்கும் மற்றுமொறு காரணமும் கூறப்படுகிறது.குண்டலினியாகிய பாம்பை இவர் ஆட்டுவித்து இறை இன்பம் காணுதலால் ஆடுபாம்பே என்று குண்டலினியை முன்னிலைப்படுத்திய சித்தர் பாடல்கள் இவை என்றும் கூறப்படுகின்றன.
பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின் பாடல்கள் போன்றே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப் பிற்பட்டவராக இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. மேலும் இவரின் பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை மாதிரியே இருக்கும்.பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் முக்தியடைந்ததாகச் சில நூல்களும் துவாரகையில் முக்தியடைந்ததாக சில நூல்களும் கூறுகின்றது.
ஆனால் இவர் ஜீவசமாதி சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி கோவில் மிக அருகில் உள்ளது. பாம்பாட்டி சித்தர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழலாகவும் தோன்றும் நிலை மாறும். கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்யப் பிரச்சினைகள் அகலும். போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் எல்லாம் நம்மை விட்டு நீங்கும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் பாம்பாட்டி சித்தர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்.பாம்பாட்டி சித்தரை மனமுருகி வேண்டினால் பாவங்கள் யாவும பறந்தோடும் பல வளங்கள் வந்து சேரும்.