சர்வதேச பண பரிவர்த்தனை துறையில், பிரபலமான நிறுவனமான பேபால், 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தப் பணி நீக்கத்தால் நிறுவனத்தின் 7% பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என்று பேபால் தலைமை செயல் அதிகாரி டான் சுல்மான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஓராண்டாக, நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாறிவரும் உலகப் பொருளாதார நிலைக்கு ஏற்ப, நிறுவனத்தின் வலிமையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான பணியாளர்களை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் செலவுகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார். முக்கியமாக, செலவுகளைக் குறைக்கும் பொருட்டு இந்த பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.