கடன் வழங்குதல் துறையில் பேடிஎம் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா பங்குதாரர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவில், கடன் வழங்குதல் துறைக்கு அதிக தேவை எழுந்துள்ளது. எனவே, நமது வணிகம் சிறப்பான முறையில் விரிவடைந்துள்ளது. அக்டோபர் மாதம் வரையிலான தரவுகளின் அடிப்படையில், வருடாந்திர கடன் வழங்கல் 387% உயர்ந்து, 3056 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், 3.4 மில்லியன் எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எண்ணிக்கை அடிப்படையில் வருடாந்திர கடன் வழங்கல் 161% உயர்ந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில், பேடிஎம் நிறுவனம் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 76% உயர்ந்து, 1914 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இழப்புகள் 11% குறைக்கப்பட்டு, வருடாந்திர லாபம் 224% உயர்ந்து 843 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.