பேடிஎம் பாஸ்ட்டேக் பயன்படுத்துவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்ட சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான பயனாளிகள் பேடிஎம் பாஸ்ட் டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி வருகிற மார்ச் 15 ஆம் தேதிக்கு பின்னர் அதன் பயனாளர்கள் பாஸ்ட்டேக் பேலன்ஸ் ரீச்சார்ஜ் செய்யவும் அல்லது டாப் செய்யவும் முடியாது.இதனால் மார்ச் 15ஆம் தேதிக்குள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்ட்டேக் பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 39 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் ஏர்டெல் பேமென்ட் வாங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா பேங்க், ஹெச்டிஎஃப்சி வாங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அடங்கும்.