பேடிஎம் பேமென்ட் வங்கியின் சேர்மன் விஜய் சேகர் சர்மா பதவி விலகி உள்ளார். விரைவில் புதிய சேர்மன் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வர்த்தக நாட்களாகவே உயர்ந்து வரும் பேடிஎம் பங்குகள், இந்த செய்தியின் எதிரொலியாக மேலும் உயர்வை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், பேடிஎம் நிறுவன பங்குகள் 5% வரை உயர்ந்து வர்த்தகமாகி உள்ளன. இன்றைய வர்த்தக நாளில், பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 427 ரூபாய் அளவில் இருந்தது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தோற்றுனரான விஜய் சேகர் சர்மா, சேர்மன் பதவியில் இருந்து விலகினாலும், தொடர்ந்து வங்கியின் நிர்வாக குழு உறுப்பினராக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.