பேடிஎம் பங்குகள் 5% உயர்வு

February 26, 2024

பேடிஎம் பேமெண்ட் வங்கி செயல்பாடுகள் பிப்ரவரி 29 முதல் நிறுத்தப்படுவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதனால், பேடிஎம் பங்குகள் வரலாற்று வீழ்ச்சியை அடைந்தன. அதன் பிறகு, மார்ச் 15ஆம் தேதி வரை சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு பேச்சு வார்த்தைகளில் பேடிஎம் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாக, கடந்த வாரம் முதல் பேடிஎம் நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில், பேடிஎம் நிறுவன பங்குகள் […]

பேடிஎம் பேமெண்ட் வங்கி செயல்பாடுகள் பிப்ரவரி 29 முதல் நிறுத்தப்படுவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதனால், பேடிஎம் பங்குகள் வரலாற்று வீழ்ச்சியை அடைந்தன. அதன் பிறகு, மார்ச் 15ஆம் தேதி வரை சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு பேச்சு வார்த்தைகளில் பேடிஎம் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாக, கடந்த வாரம் முதல் பேடிஎம் நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில், பேடிஎம் நிறுவன பங்குகள் 5% உயர்வை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் போது, பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 428 ரூபாயாக இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கை படி, யுபிஐ பரிவர்த்தனைகளை தொடர்வதற்கு இந்திய தேசிய கட்டணங்கள் கழகம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய பேடிஎம் பங்குகள் உயர்வதற்கு இதுவே முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu