அரியானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் இடையூறு செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி மோட்டார் வாகன சட்டம் 194 இ பிரிவின் கீழ் இடையூறு, அவசர காலத்தில் வழி விடாமல் இடையூறு செய்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தன்னை அல்லது இரண்டுமே விதிக்கப்பட உள்ளது. இடையூறு செய்யும் நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து உடனடியாக அபராத ரசீது அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது.