புதுச்சேரியில் ஆம்னி பஸ்கள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் வாடகை கார்களை பொது இடங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஆம்னி பஸ்கள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் வாடகை கார்களை பொது இடங்கள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இரு புறமும் நிறுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதோடு, சாலை விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மேற்கூறிய வாகன உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பொது இடங்களில் நிறுத்தினால் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் மூலம் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகன மென்பொருள் அமைப்பில் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.