விதியை மீறி செயல்பட்ட ஆம்னி பஸ்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அளவுக்கு அதிகமாக டிக்கெட் வசூலிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். இதில் 6699 பேருந்துகள் மீது சோதனை நடத்தினர். அதில் 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அபராதமாக ரூபாய் 18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கபட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.