கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆப்பிள் நிறுவனம் AirTag ஐ அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் ஏர்போட்கள் முதல் கார் வரை தொலைத்த அல்லது திருடப்பட்ட தயாரிப்புகளை உரிமையாளர்கள் கண்டுபிடிக்க AirTag உதவியுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் சனிக்கிழமை இரவு டிஸ்னிலேண்டில் ஒருவர் ஆப்பிள் ஏர்டேக்கைப் பயன்படுத்தி ஒரு பெண்ணுக்குத் தெரியாமல் சுமார் அவரை இரண்டு மணிநேரம் பின்தொடர்ந்தாக தகவல் வெளியாகி உள்ளது . இது குறித்து அப்பெண் தனது டுவிட்டர் பதிவில் ” புளூடூத் வழியாக ஏர்டேக் தனது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்ட பிறகு யாரோ தன்னைக் கண்காணிப்பதை உணர்ந்தாகவும் , குறிச்சொற்கள் தனது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டபோது ஒரு அறிவிப்பு வந்தது. தற்போது வரை, ஏர் டேக் அந்த நபரால் எங்கு வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் அது தன்னுடைய பையில் அல்லது பாக்கெட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ௯றினார். மேலும் அப்பெண் “பூமியில் உள்ள மகிழ்ச்சியான இடம் எனது மோசமான கனவாக மாறும்,” என்று கூறினார்.