கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் சில தினங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றன. அங்கு பலர் ரத்தத் தட்டுகள் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்த தட்டுகள் தேவை அதிகரித்துள்ளன. இதனால் பல ரத்த வங்கிகள் இரத்ததான முகாம்களையும் நடத்தி வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு டெங்கு பரவலை தடுப்பதற்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவது, தண்ணீர் தேங்கும் இடங்களை சரி செய்வது, தூய்மையை பராமரிப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுமக்கள் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர்.