ஜப்பான் நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. இதனால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் 252000 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 2023 ஆம் நிதியாண்டு முதல், கூடுதலாக 42000 ரூபாய் வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளது.
ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில், பொருளாதார நிதி பற்றாக்குறை, உறுதித் தன்மையற்ற வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.