மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு மாநாடு நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டின் சிறப்பு இசை பாடல், நூற்றாண்டு நினைவு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 92 சதவீத பேருக்கும் போடப்பட்டுள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. பொது மக்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் சமீபத்தில் 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த துறை இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.