பிரபல குளிர்பான தயாரிப்பாளரான பெப்சிகோ நிறுவனம், வியட்நாம் நாட்டில் கூடுதலாக 400 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது. அந்த நாட்டில், 2 புதிய ஆலைகளை தொடங்க உள்ளது. இவை இரண்டும் புத்தாக்க எரிசக்தி மூலம் இயங்கும் என தெரிவித்துள்ளது.
வியட்நாமின் தெற்கு லாங் ஆன் மாகாணத்தில் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய குளிர்பான தயாரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. மேலும், வியட்நாமில் வடக்கு ஹா நாம் மாகாணத்தில் உணவு தயாரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. கிட்டதட்ட 90 மில்லியன் டாலர்கள் மதிப்பில் இது அமைக்கப்படுவதாக வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில், இந்த ஆலைகள் செயல்பாடுகளைத் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.