தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1196 நர்சுகளின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூபாய். 15.50 கோடி மதிப்பீட்டில் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவின் கூடுதல் தளங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்பொழுது, தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் 1021 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரானா காலத்தில் நியமிக்கப்பட்ட 977 நர்சுகளின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 2015 ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 483 ஒப்பந்த நர்சரிகளின் பணிகள் நிரந்தரம் செய்யப்படுகிறது. அதே போன்று 2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட 977 நர்சுகளின் பணியும் நிரந்தரம் செய்யப்படுகிறது. அவ்வகையில் 1196 ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் நிரந்தர பணி ஆணை நாளை வழங்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.