சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது- முதல்வர் பினராயி விஜயன் 

April 12, 2023

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து, அதனை பற்றிய விபரங்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் […]

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து, அதனை பற்றிய விபரங்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தற்போது சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான அனுமதி கிடைத்துள்ளது. எனவே அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்கும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu