இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கியது முதலே உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தன. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த மறுத்துவிட்டன. தற்போது சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் தேவை சீனாவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 7 லட்சம் பாரல் வரை குறைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்யாவை நம்பி உள்ள நாடுகளின் எரிபொருள் தேவைக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று நம்பப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயரக்கூடும் என்று தெரிகிறது.