இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 600 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வில்லை
இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாய் டீசல் 16 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பெட்ரோல் டீசல் விலை கடந்த 600 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த படவில்லை. மேலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவு லாபம் கிடைத்துள்ளதால் 2023 - hu24 ஆம் ஆண்டு முதல் என்ன நிறுவனங்களுக்கு மொத்தமாக 75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது அதனை எடுத்து வாடிக்கையாளர்களின் சுமையை குறைக்கும் விதத்திலும் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வழங்குவதற்கு இன்றைய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது அதன்படி பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.