இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதத்தில், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை 12% மற்றும் 13% உயர்வை முறையே பதிவு செய்துள்ளன. இது, பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய, 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 20% மற்றும் 8% உயர்வாகும். அதே வேளையில், சமையல் எரிவாயு விற்பனை, முந்தைய ஆண்டை விட 2.4% உயர்வைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது, 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 22% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து துறை, பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. அதை எதிரொலிக்கும் விதமாக, விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 41% வருடாந்திர உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஆனால், கொரோனாவுக்கு முந்தைய, பிப்ரவரி 2020 விட 10% குறைவாகப் பதிவாகியுள்ளது. அரசாங்கத் தரவுகளில் இருந்து இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.