பிஃஎப் பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊழியரும், பணியிடத்தில் பிஃஎப் பணத்தை சேமிக்கின்றனர். ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மூலம், ஊழியர்களின் எதிர்கால தேவைகளுக்காக அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு தொகை பிஃஎப் கணக்கில் சேமிக்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக, நிறுவனமும் பங்குசேர்க்கிறது. இந்த பணத்தை, ஊழியர்கள் ஓய்வுக்கு பின் எடுக்கலாம். இதேபோல், கல்வி, மருத்துவம், வீடு வாங்குதல் மற்றும் திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக பணம் முன்னதாக எடுக்க முடியும்.
பணி கடமைகளுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், மருத்துவ அவசர நிலைகளிலும் பிஃஎப் பணத்தை எடுக்க முடியும். பணம் எடுக்கும் முறைக்கு UAN (யுனிவர்சல் கணக்கு எண்) தேவை. EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) உள்நுழைந்து, தேவையான தகவல்களை உள்ளிட்டு பணத்தை எடுக்க முடியும்.
மேலும் தற்போது, UMANG செயலியின் மூலம் PF நிலவரத்தையும் அறியலாம். பணம் எடுக்க, EPFO போர்ட்டலில் 'ஆன்லைன் சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுத்து, உரிமைகோரல் (Form-31, 19 & 10C) எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களுடன் கோரிக்கை சமர்ப்பிக்கவும். பின்னர், கோரிக்கை சரிபார்த்து, பணம் வங்கி கணக்கில் மாற்றப்படும்.