பிலிப்பைன்ஸ் நாட்டில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத குழுவின் தலைவர், அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிலிப்பைன்சில் உள்ள மராவி என்ற பகுதியை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிரிவான அபு சயாப் கைப்பற்றியது. அப்போது முதல், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மராவியை கைப்பற்றியதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் பகுருதீன் பெனிடோ ஹட்ஜி சதார் என்பவர் ஆவார். அவர் அபு சயாப் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவராக அறியப்படுகிறார். அவர், மராவி நகர் அருகே பதுங்கி இருப்பதாக பிலிப்பைன்ஸ் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில், பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் பயங்கரவாதிகள் முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், சதார் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.