பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வெளிநாட்டினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பிறகு, கிராமவாசிகள் 2 ஆண்கள் உட்பட 4 பேரின் உடல்களை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் உடல்களை கைப்பற்றி, இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.