வெயிலின் தாக்கத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடும் வெப்பம் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2.8 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க அரசே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடும் வெப்பத்திற்கு எதிராக ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் உத்தரவு வெளியிட்டுள்ள அரசு, பகல் நேரத்தில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 242 மில்லியன் குழந்தைகள் வெப்பம் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.