பிலிப்பைன்ஸ் நாட்டில் அமேசான், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு 12% மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு மூலம், உள்ளூர் நிறுவனங்களுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே நியாயமான போட்டி நிலை ஏற்படும் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நம்புகிறது. மேலும், இந்த வரி மூலம் அரசாங்க வருவாயை அதிகரிக்கவும் முடியும் என்று கூறுகிறது. இந்த வரி விதிப்பு மூலம் 2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 105 பில்லியன் பெசோக்கள் (சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இந்த வருவாயில் 5% தொகை ஆக்கப்பூர்வமான தொழில்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும். அதேசமயம், கல்வி மற்றும் பொது சேவைகள் இந்த வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.