பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான போன் பே, தனது தாய் நிறுவனமான வால்மார்ட்டிடம் இருந்து, கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் நிதியை பெற்றுள்ளது. இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1 பில்லியன் டாலர்கள் நிதி அளிக்கும் திட்டத்தின் பகுதியாக சொல்லப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து முழுமையாக வெளியேறிய பின்னர், போன் பே நிறுவனம் மூன்றாவது முறையாக நிதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பெறப்படும் இந்த நிதி மூலம், இந்தியாவின் மதிப்புமிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை தளமாக போன் பே மாறுகிறது. மேலும், 7.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ரேசர் பே நிறுவனத்தை போன் பே முந்துகிறது. போன் பேயின் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. புதிதாக பெறப்படும் நிதி, காப்பீட்டு துறை, கடன் வழங்கல் துறை, பங்குச் சந்தை மற்றும் அரசின் ஓஎன்டிசி தளத்திற்கான பரிவர்த்தனை சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.