பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான போன் பே, வருடாந்திர அடிப்படையில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான கட்டண மதிப்பு இலக்கை எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 84 லட்சம் கோடி ஆகும்.
போன் பே நிறுவனம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 2, 3, 4ம் தட்டு நகரங்களில் உள்ள 35 மில்லியன் வியாபாரிகளை டிஜிட்டல் வணிகத்திற்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் 99% பகுதிகளில், போன் பே டிஜிட்டல் வணிகம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் 'பேமெண்ட் அக்ரிகேட்டர்' உரிமத்தை போன் பே நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் யுபிஐ பரிவர்த்தனைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல, போன் பே நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.