இந்தியாவில் டி10 கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டு பிரமாண்டமாக பிசிசிஐ நடத்தி வருகிறது. இதே போல இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐபிஎல் போன்று முதலாவது பெண்கள் பிரீமியர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தற்போது டி10 கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.