நாடு முழுவதிலும் உள்ள 62 கன்டோன்மென்ட்களை ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
புதிய கன்டோன்மென்ட் பிரிப்பு திட்டம் ஏற்கெனவே யோலில் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரல் 27-ல் வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ராணுவப் பகுதியும் சிவிலியன் பகுதியும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட கன்டோன்மென்ட்களில் இருந்தால் எல்லை வரையறைபணி எளிதாக இருக்கும். மற்ற கன்டோன்மென்ட்களில் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கன்டோன்மென்ட்களில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சிகள் மூலம் அந்தந்த மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இனி அவர்களுக்கு அந்த நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
கன்டோன்மென்ட்களில் இருந்து பிரிக்கப்பட்ட ராணுவ நிலையங்களின் வளர்ச்சியில் ராணுவம் முழு கவனம் செலுத்த முடியும். பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் முடியும் என்று தெரிவித்துள்ளனர்.