உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டை துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் உலகத் தமிழர் பொருளாதார உச்சிமாநாடு மார்ச் மாதம் துபாயில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழர் பொருளாதார மாநாடு இதுவரை 8 முறை பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இதுகுறித்து உலகத் தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் கூறுகையில், துபாயில் உள்ள உலக வணிக மைய வளாகத்தில் மார்ச் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாட்டை சென்னை வளர்ச்சிக் கழகம் நடத்துகிறது.
சமூகப் பொருளாதார அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வகையில் நடக்கும். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய தலைவர்கள், வணிக வல்லுநர்கள், நிர்வாகவியலாளர்கள், சுய தொழில்புரிவோர், வர்த்தக மன்ற பிரதிநிதிகள், பொருளாதார அறிஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.