உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்,பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் தொகுதி வாரியான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி வாரியாக 37 கூட்டங்கள் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ளன. இதில் இன்று 11 ஊர்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.