பொதுமக்கள் எளிதாக பட்டா பெரும் வகையில் மூன்று நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கு மிகுந்த சிரமம் அடைய வேண்டியுள்ளது. மேலும் இதில் அதிக அளவு லஞ்சம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் எளிய வகையில் பட்டாக்களை பெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அதற்காக சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதன்படி தற்போது பொதுமக்கள் எளிதாக பட்டா பெறுவதற்கு மூன்று நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் நடைமுறை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணைய வழி சேவையாகும். ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது நடைமுறையாக பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் வரிசைப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டம். அதாவது ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்த மூன்று நடைமுறைகளால் தமிழகத்தில் பட்டா வழங்கும் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளன