தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவது மட்டுமின்றி அடிப்படை கல்வி பணிகளையும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் குறைந்த தொலைவில் உள்ள 2 மையங்களை ஒன்றிணைப்பது, 10 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மையங்களை மூடுவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர். 10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மையங்கள் மூடப்படும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.