ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்பனை செய்ய திட்டம்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் நாசர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆவின் நிறுவனம் சார்பில் […]

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் நாசர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu