கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் 178 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் ஆனது வங்காளதேச தலைநகரான டாக்காவிற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு இந்த விமானம் அதிகாலை 4:00 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் டாக்காவில் இருந்து இந்த விமானத்தை கவுகாத்தி நகருக்கு இயக்க மாற்றுக் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் மனப்பூர்வ வருத்தத்தை தெரிவித்துள்ளது.