நேபாளத்தில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் மொத்தம் 19 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 18 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. தீவிர காயங்களுடன் இருக்கும் விமானிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்க, அதன் பின் தீப்பிடித்து எரிந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். இந்த நிலையில், நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படுவது பேசு பொருளாகி உள்ளது.