பிலிப்பைன்ஸுக்கு அடுத்த ஆண்டு முதல் பிரம்மோஸ் நிறுவனம் ஏவுகணை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் முதல் விநியோகம் 2023 இல் தொடங்கும்
என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் இணை இயக்குனர் அலெக்சாண்டர் மக்சிசேவ் தெரிவித்துள்ளார்.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது 1998 இல் தொடங்கிய இந்தியா - ரஷ்யா ௯ட்டு நிறுவனமாகும் . இந்நிறுவனம் கப்பல் ஏவுகணைகள் , ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்புகள் போன்ற துணை உபகரணங்களை தயாரிக்கும். இந்நிறுவனம் பிலிப்பைன்ஸுக்கு ஏவுகணைகளை வழங்குவதற்கான 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் முடிவானது. இது இந்நிறுவனத்திற்கு முதல் ஏற்றுமதி ஒப்பந்தம் ஆகும்.
இது குறித்து ௯றிய ஏரோஸ்பேஸின் இணை இயக்குனர் அலெக்சாண்டர் மக்சிசேவ் கூறுகையில் இவை கடலோரப் பாதுகாப்பிற்கான ஏவுகணைகளாக இருக்கும் என்றார்.