சில தினங்களுக்கு முன்னர் ,பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் உலகின் ஆபத்தான தாவரம் ஒன்றை பொழுதுபோக்கிற்காக வளர்த்ததாக தெரிய வந்தது. Dendrocnide Moroides என்ற விஷத்தன்மை உடைய தாவரத்தை அவர் வளர்த்து வந்தார். தற்கொலை எண்ணத்தை தூண்டுவதால், இந்த தாவரம் Suicide Plant என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரம், ஒரு வருடத்திற்கும் மேலாக இதனைத் தொட்டவர்களை துன்புறுத்தவல்லது. ஆனால், அவர் கூண்டிற்குள் வைத்து இந்த தாவரத்தை வளர்த்து வந்ததால் ஆபத்துகள் இல்லை.
இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு பெண், சயனைடு விஷத்தை விட 6000 மடங்கு விஷத்தன்மை உடைய தாவரம் ஒன்றை கண்டறிந்துள்ளார். அது பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் வளர்ந்து வருவதாக எச்சரித்துள்ளார். Ricinus Communis என்ற அந்த தாவரத்தின் பூக்கள் உலகிலேயே அதிக விஷத்தன்மை உடையதாகும். இது ஆஸ்துமா வர வைக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அறிந்தவுடன், அவர் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த தாவரத்தை அகற்ற வேண்டும் எனவும், அதன் அருகில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.