மன அழுத்தத்தின் போது தாவரங்கள் ஒலி எழுப்புகின்றன - ஆய்வுத் தகவல்

மனிதர்கள் மன அழுத்தம் ஏற்படும் போது கத்துவதைப் போல தாவரங்களும் ஒலிகள் எழுப்பும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தக்காளி மற்றும் புகையிலை செடிகளை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கணினியில் கிளிக் செய்யும் போது வெளிப்படும் ஒலியை விட குறைவான ஒலியை தாவரங்கள் எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உயர் அல்ட்ராசோனிக் அலையாக வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, கோதுமை, மக்காச்சோளம் போன்ற தாவரங்களிலும் இந்த […]

மனிதர்கள் மன அழுத்தம் ஏற்படும் போது கத்துவதைப் போல தாவரங்களும் ஒலிகள் எழுப்பும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தக்காளி மற்றும் புகையிலை செடிகளை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கணினியில் கிளிக் செய்யும் போது வெளிப்படும் ஒலியை விட குறைவான ஒலியை தாவரங்கள் எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உயர் அல்ட்ராசோனிக் அலையாக வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, கோதுமை, மக்காச்சோளம் போன்ற தாவரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாவரங்கள் எழுப்பும் ஒலிகள், பூச்சிகள், எலிகள், ஆந்தைகள் போன்ற விலங்குகளுக்கு கேட்கும் என சொல்லப்பட்டுள்ளது.

தாவரங்கள் ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதனுடன் ஒரு மைக்ரோஃபோன் வைக்கப்பட்டது. வெளியில் இருந்து வரும் ஒலிகள் உள்ளே கேட்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 20 முதல் 250 கிலோ ஹெர்ட்ஸ் வரை ஒலிகளை அந்த மைக்ரோஃபோன் பதிவு செய்யும். அதன்படி, சில தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றாமல், சரியான சூழல் ஏற்படுத்தப்படாமல் இருக்கும் பொழுது, ஒலிகள் எழுப்புவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu