பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3 முதல் 25 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில், 8.21 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இதில் 3.88 லட்சம் மாணவர்கள், 4.24 லட்சம் மாணவிகள், 18 ஆயிரம் தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் தேர்வு எழுதியுள்ளனர். ஏப்ரலில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பிழையின்றி தரவுகள் பதிவாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். முதலில் மே […]

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 3 முதல் 25 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில், 8.21 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இதில் 3.88 லட்சம் மாணவர்கள், 4.24 லட்சம் மாணவிகள், 18 ஆயிரம் தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் தேர்வு எழுதியுள்ளனர். ஏப்ரலில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பிழையின்றி தரவுகள் பதிவாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். முதலில் மே 9ல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டாலும், அரசின் புதிய முடிவுப்படி, மே 8 காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியாகும். முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் results.digilocker.gov.in தளங்களில் பதிவு எண், பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மற்றும் எஸ்.எம்.எஸ் வாயிலாகவும் மாணவர்கள் அறியலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu