பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.2 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பங்கேற்கின்றனர்.
இது 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும். இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத எளிதாக இருக்க 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் செயல்படுகின்றனர். தேர்வு நடைபெறும் பள்ளிகளில் தொடர் மின்சாரம் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.