பாஜக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
பாஜக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானாவில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு அதற்கேற்றவாறு தீவிரமாக பிரச்சாரங்களை செய்து வருகின்றது. அதன்படி நரேந்திர மோடி தெலுங்கானாவில் அடுத்த வாரங்களில் அனல் தெறிக்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி 30 ஆம் தேதி
ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்து உரையாட உள்ளார். மே 3 ஆம் தேதி வாரங்கல் தொகுதியிலும், 4ம் தேதி மகபூபாத் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளார். அதனைத் தொடர்ந்து 5ம் தேதியும் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.